கள்ளத்தொடர்பு விவகாரம்: அழகிய நிலையில் பெண் சடலம்..! விசாரணைக்கு பயந்து முதியவர் தற்கொலை முயற்சி..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரது உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாகலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை … Read more

வாட்டி வதைத்து எடுக்கும் வெயில்.. தமிழகத்தில் நேற்று 16 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – … Read more

சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் – காரணம் என்ன?

சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் – காரணம் என்ன? கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், சென்னையில் இன்று மாலை ஐந்து மணிக்கு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததால் … Read more

#BREAKING || அமித் ஷா வரும் நேரத்தில் பவர் கட்.. போராட்டத்தில் குதித்த பாஜகவினர்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து கார் மூலம் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரில் இருந்து இறங்கி பாஜக தொண்டர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா … Read more

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா : விடிய விடிய கறி விருந்து!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு திருவிழா, நத்தம் அருகே கோபால்பட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் பொழுது விடிய விடிய கறி விருந்து வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம் பகுதியில் உள்ள, கோபால்பட்டியில் சந்தன கருப்பு கோயில் உள்ளது.  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உற்சாக திருவிழா முப்பது ஆண்டுகள் கழித்து நேற்று (ஜூன் 9) இரவு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் … Read more

ஆமாங்க, தப்பு நடந்து இருக்கு, இனி நடக்காது! அமைச்சர்களின் அலட்சிய பதில்! 

டெல்லி, கோபால் மற்றும் குவாலியர் நகரங்களில்  கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவர் கூட கலந்து கொள்ளவில்லை.  இதற்கு முழுக்க முழுக்க காரணம் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் அலட்சியம் தான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை … Read more

டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசியம்.! – அமைச்சர் பெரியசாமியின் பதிலால் சர்ச்சை.!!

சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டியில் நடைபெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் வாளுக்குவேலி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “வாளுக்கு வேலி புகழை போற்றும் வகையில் தென்பாண்டி சிங்கம் என்ற நூலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்தவும், மணிமண்டபத்துக்கு ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கினார். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் … Read more

விருதுநகர் : 12 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் கைது.!!

விருதுநகர் : 12 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் கைது.!! விருதுநகர் மாவட்ட குழந்தைகள் அலகுக்கு குழந்தைகள் உதவி எண்ணான 1098க்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பேசிய நபர், ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமிக்கு திருமணம் நடந்திருப்பதாகத் தகவல் வந்தது.  சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலக்குழுமத்தில் இருந்து வந்த தகவலின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் சமூகநலத்துறை ஊர்நல அலுவலர் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். அந்த விசாரணையில் ஒத்தப்பட்டி பகுதியைச் … Read more

பழனி : பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி தகராறு – மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி.!

பழனி : பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி தகராறு – மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி.! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தெற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே செந்தில்குமாருக்கும், மனைவி கவிதாவிற்கும் அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. இந்தப் பிரச்சனை தேவதர்ஷினி முன்னிலையிலும் நடந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவும் தம்பதியினருக்கு … Read more

தாயின் நினைவாக தாஜ்மஹால் கட்டிய மகன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

திருவாரூர் அருகே தாஜ்மஹால் வடிவில் தாயின் நினைவாக மகன் கட்டியுள்ள நினைவிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் பகுதியில் ஷேக்தாவுது – ஜெய்லானி பீவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். இதில் நான்கு மகள்களும் திருமணமாகி சென்னையில் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெய்லானி பீவி காலமானார். இதனையடுத்து தனது தாயின் நினைவாக நினைவிடம் அமைக்க மகன் அமிர்தின் விரும்பியுள்ளார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள … Read more