கரூர் : குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.!

குளித்தலை அருகே மின்னல் தாக்கியதில் சரவணன்(45) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சரவணன் (45 வயது) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும், மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சரவணனின்  உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source link

தற்கொலைக்கு முயன்ற விசாரணை கைதி மரணம்.. ஜாமீன் எடுக்காததால் விபரீத முடிவு..!

தற்கொலைக்கு முயன்ற விசாரணை கைதி மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்பவர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வந்தார்.  சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும் அவரது உறவினர்கள் ஜாமீன் எடுக்காததால் விரக்தியடைந்த  அவர் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு … Read more

நெல்லை கல்குவாரி விபத்து.. 5-வது நபர் சடலமாக மீட்பு.!

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் கடந்த 14ம் தேதி குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது.  இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை … Read more

சென்னையில் சோகம்.. எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்து.!

சென்னை சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர் சமையல் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் பேட்டரிக்கு முதல் மாடியில் உள்ள வீட்டின் அறையில் வைத்து சார்ஜ் போட்டுள்ளார். இந்தநிலையில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. இதனையடுத்து ஈஸ்வரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வேகமாக வெளியேறினார். இதனிடையே … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் … Read more

‌பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது.!

பாஜக மூத்த தலைவர் எச்ச ராஜா திண்டுக்கல்லில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், திண்டுக்கல் எஸ்பி தன்னை கைது செய்ததாக பதிவிட்டுள்ளார். மேலும், நான் பழனியில் உள்ள இடும்பன் குலத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். Source link

பேரறிவாளன் விடுதலை : முழுக்க, முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி – ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை.!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது முழுக்க, முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி என்று, அக்கட்சியின் தலைமைகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த இன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது, அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட … Read more

விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ … Read more

பேரறிவாளனின் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி : உடல் நலம் பேண வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி ஒரு தீர்ப்புக்காகத் தான் நானும், ஒட்டுமொத்த  தமிழ்நாட்டு மக்களும் காத்திருந்தோம். இது நீதிக்கும், நியாயத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். பேரறிவாளனின் வெற்றிக்கு முதன்மைக் காரணம் அவர் நடத்திய சட்டப் போராட்டம் என்றால், அதை விட முக்கிய காரணம் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் … Read more

பேரறிவாளன் விடுதலை கண்டித்து நாளை போராட்டம்… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..!

பேரறிவாளன் விடுதலையானதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்ப்பில் வாயில் கருப்புதுணி கட்டி போராட்டம் நடந்த போவதாக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது . அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது .  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை . அதேநேரத்தில் , குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் , … Read more