இலங்கையில் இன்று கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
இலங்கையில் இன்று(16) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 320
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் இன்று(16) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 320
கடந்த திங்கட்கிழமை (14) கொவிட் 19 தடுப்பூசி 25 ஆயிரத்து 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதத்தை எட்டியுள்ளதுடன், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 66.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, 20 வயதிற்கு மேற்ட்டவர்களில் 96 வீதமானோர் முதல் இரண்டு டோஸினையும், 51.94 சதவீதமானோர் மூன்றாவது டோஸினையும் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96.1 வீதமானோர் முதல் டோஸினையும் 82.1 வீதமானோர் 2 … Read more
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அடிக்கடி பல்வேறு அறிக்கைகளை கோருவதன் மூலமான பயன்கள் என்ன? நாடு ஒன்றின் உள்ளக விடயங்களில் இந்த வகையில் அழுத்தங்களை மேற்கொள்வதன் நோக்கம் என்ன? அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி கருதி இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்துவது போன்ற … Read more
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், எதிர் காலத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து சேலைன் (Saline) போத்தல்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அத்துடன், வருடாந்தம் 26 மில்லியன் சேலைன் (Saline) … Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையிலிருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசலை எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று (15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை நிலையங்களில் … Read more
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் தொடர்பான இரண்டு ஒழுங்கு விதிகளை அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அண்மையில் நடைபெற்ற (11) காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. காணி அமைச்சர் கௌரவ எஸ்.எம்.சந்திரசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155ஆம் மற்றும் 157ஆம் பிரிவுகளின் கீழ் காணி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 28ஆம் திகதிய 2251/48 இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை மற்றும் … Read more
இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றம் தொடர்பான நூல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இதன் ஓர் அங்கமாக பாராளுமன்ற முறைமைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொது நூலக அதிகாரிகளின் … Read more
பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா, 15.03.2022 அன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,’இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு … Read more
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, இன்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யக்கூடிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்ரவரியிலும் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் … Read more