கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று பிற்பகல் 04.00 மணி முதல் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. இன்று பிற்பகல் 04.10 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த Fitz Air விமானம் 8D 834 … Read more

புலம்பெயர் அமைப்புக்களிடம் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுமாறு அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வீதம் உதவி … Read more

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரக பேச்சாளார் விளக்கம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்று எழுப்பிய இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளார் ஒருவர் கொழும்பில் அமைந்துள்ள தூதரகம், மற்றும் வெளிவிவகார திணைக்களம் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இவ்வாறான விடயங்களை மீளாய்வு செய்து வருகின்றது.  அத்துடன் உலகளவில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல் செயற்பாடு  என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு இணைப்பு இலங்கையின் … Read more

அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும். வழங்கப்படும் சந்தர்ப்பம் அத்துடன் தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு … Read more

யாழிற்கு விரைந்துள்ள முக்கிய குழு! வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (Photos)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் அடங்கிய குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.  2022/2023ஆம் ஆண்டின் காலபோக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் … Read more

இலங்கையில் அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் சீனா

இலங்கையில் நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சீன முதலீடாக இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. இதனால் புதிய தொழில்நுட்பத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். … Read more

பேஸ்புக் தொடர்பில் வெளியான தகவல்

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Meta நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் விடுத்துள்ள விசேட குறிப்பொன்றை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பான குறிப்பில் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது, இம்முறை ஊழியர் குறைப்பு மே மாதம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.  பேஸ்புக் ஊழியர்களை குறைப்பு   அதன்படி, பேஸ்புக் ஊழியர்களை குறைப்பது இது மூன்றாவது முறையாகும். முந்தைய இரண்டு தடவைகளிலும் சர்வதேச ரீதியில் சுமார் 21,000 தொழிலாளர்கள் … Read more

யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது,  100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27.04.2023) மாலை உயிரிழந்துள்ளார்.  வெளியான மருத்துவ அறிக்கை அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். சந்தேகநபர் கைது  100 வயதான … Read more

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video)

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் இணைப்பு வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று (26.04.2023) ஆரம்பமாகி உள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்களும் … Read more

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாயம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை, வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 … Read more