மக்களே அவதானம்! நாட்டின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம்

நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. டெங்கு அபாய வலயங்கள் அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து … Read more

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருவாய் மேம்பாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாய்கள் என்பன கடந்த மார்ச் மாதத்தில், குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பதிவு செய்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் ஏற்பட்ட மேம்பாடுகளினால் கடந்த மார்ச் மாதத்தில், செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்ததுள்ளதாக இலங்கை … Read more

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தோலில் பயன்படுத்தப்படும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களில் அதிகபட்ச வரம்பைத் தாண்டி கன உலோகங்கள் இருப்பதும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​எந்தவொரு பொறுப்பான தகவலும் மற்றும் தேவையான சட்டப் பணிகளும் குறிப்பிடப்படாமல், சந்தைகளில் பொடி லோஷன் பொதிகளில் (பேக்கேஜிங்கில்) முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சட்ட நடவடிக்கை இது தொடர்பாக செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் … Read more

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்

ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) 2022 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் (MCPA) தலைவர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.  பாடசாலை மாணவர்களுக்கான உணவு இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் பல காரணிகளால் சீர்குலைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் … Read more

ஒன்லைனில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர், அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் இரத்தினபுரி நகரிலுள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் நவீன கையடக்கத் தொலைபேசிக்கு … Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் … Read more

அமெரிக்காவின் தீர்மானத்தின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி! வசந்த கரன்னாகொட தகவல்

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு குறித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ‘வேறு ஏதோ ஒன்று’ இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளன, இதன் பின்னணியில் வேறு ஏதோ இருப்பதாக தாம் நம்புவதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய தீர்மானம் “யுத்தம் முடிந்து 14 வருடங்களின் பின்னர் திடீரென … Read more

இந்திய ரூபாவின் பயன்பாடு – அமெரிக்க டொலருக்கு எச்சரிக்கையா! இலங்கையின் காத்திருப்பு

Courtesy: koormai 1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப்போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். … Read more

தனது படைப்பை அமெரிக்க தூதுவர் ஒரு நாளுக்குள் வாசித்ததில் மகிழ்ச்சி : விமல் வீரவன்ச

அமெரிக்கத் தூதுவர் தனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு நாளுக்குள் தனது படைப்பை வாசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது புத்தகத்தை ‘புனைவு’ என்று கூறியதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் விமல் வீரவன்சவின் நூலில் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை ஜூலி சங் ஏற்கனவே மறுத்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிரான கருத்து இதேவேளை … Read more

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான வாக்கெடுப்பை பகிஷ்கரிக்கும் கூட்டமைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு  நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(28.04.2023)  நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மூன்றாவது நாளாக இன்று காலை ஆராம்பமாகியது. இந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக பங்குபற்றாக சூழ்நிலை இருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம் இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினாரால் வாக்களிக்க … Read more