இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளதாக உறுதியளித்த அமெரிக்காவின் பெரும்புள்ளி

பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ள இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா முன்வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். கலந்துரையாடலின் போது சமகால நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் , G7 நாடுகள் போன்ற அமைப்புகளுடன் நெருங்கி செயற்படவுள்ளதாகவும் சமந்தா பவர் உறுதியளித்தார் . இந்த மாத தொடக்கத்தில் அரசியல் அமைதியின்மையால் கொல்லப்பட்ட அல்லது … Read more

லிட்ரோ நிறுவனத்தின் மேலும் ஒரு அறிவிப்பு

நாளைய தினமும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது  என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  லிட்ரோ நிறுவனம் இன்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியிருந்தது.  இந்த நிலையில் சிலிண்டர்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசைகளில் நிற்க வேண்டாம் என நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.  இலங்கையில் தற்போது எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக் … Read more

அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக மரக்கறிகள், இறைச்சி பொருட்கள், பால் பொருட்கள், முட்டை மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 60 சதவீத பொது மக்களுக்கு உணவு வழங்க முடியவில்லை, மேலும் நேற்றிரவு எரிபொருள் விலை உயர்வு மேலும் பட்டினி … Read more

எரிபொருள் கொள்வனவுக்கு இந்திய வங்கிகள் கடனுதவி

இலங்கையின் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இந்திய வங்கிகளின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகிய கால கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக இந்திய அரச வங்கியொன்றிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் கடன் தொகையைக் கொண்டு … Read more

32 ரூபாவாக உயர்த்தப்படும் குறைந்தபட்ச கட்டணம்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேருந்து பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.  முதலாம் இணைப்பு இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 25 – 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். விலைசூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் … Read more

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.  அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை கீழுள்ள இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.  வெட்டுப் புள்ளிகளை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.. Source link

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள்  விநியோகத்தில் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி,  இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும்.  எனினும், பேருந்துகள், … Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதாள உலக குழு அச்சுறுத்தல் – ஆபத்தான நிலையில் மக்கள்

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாதாள உலகக்குழுவின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதாள குழுவினர் அட்டகாசம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கு வரும் ரவுடிகள், பொலிஸார் முன்னிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களையும், வரிசையில் நிற்கும் மக்களையும் அச்சுறுத்தி தங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் மக்களை பொலிஸார் முன்பாகவே அச்சுறுத்தி தாக்கும் சம்பவங்கள் … Read more

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி: போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அனுமதி

இலங்கையில் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு … Read more

இலங்கையில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளை வெளியேற்ற முயற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுமார் 30 வீதமான ஆடைத் தொழிற்சாலைகள் வேறு நாடுகளில் அமைக்கப்பட்டு வருவதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதி பொருட்களை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை, மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றனவே இதற்கு காரணம் என அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் … Read more