ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சிஐடியில் முன்னிலையாகுமாறு அழைப்பு

மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 21 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் கடந்த வாரம் (16) உத்தரவிட்டார். இதன்படி, … Read more

மீண்டும் வலுவடையும் காலி முகத்திடல் போராட்டம்

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு- காலிமுகத்திடலில், பொதுமக்கள் தொடர்ந்தும்  45ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டமானது கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.   இதேவேளை கடந்த மே-09ம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் அரச ஆதரவாளர்களால் வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து   முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச  பதவி விலகியிருந்தார்.   இதேவேளை மகிந்த ராஜபக்ச பதவி … Read more

நாளை மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் – வெளியாகியுள்ள தகவல்

அரச சேவையின் அத்தியாவசிய கடமைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு அறிவிக்கும் அரச நிர்வாக அமைச்சின் விசேட (24) வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளார். சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அத்தியவசிய உத்தியோகத்தர்களை தீர்மானித்தல் மற்றும் அதனை நிறுவன தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   … Read more

தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம்! சட்டமா அதிபர், பொலிஸ் அதிபருக்கு பணிப்பு

 மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீது கடந்த மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த இடமாற்ற பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. Source link

விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்த சனத் நிஷாந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. அலரி மாளிகைக்கு எதிரிலும் காலிமுகத் திடலிலும் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதத்தின் … Read more

இலங்கையில் தொடர்பில் சாதகமான தகவலை வெளியிட்ட மத்திய வங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரையில் சாதகமான நிலையை எட்டும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்துடான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை அடையும் சாத்தியப்பாடுகள் தென்படுவதாக மத்திய … Read more

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் இவர்தான்! அநுர பகிரங்க அறிவிப்பு

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய காடையர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அங்கு  மதுபானமும், பொல்லுகளும் வழங்கப்பட்டு அவர்கள்  ஏவிவிடப்பட்டுள்ளனர். அதற்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள் காரணமாக உள்ளனர். பின்னர் … Read more

யாழில் ஒரு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஒரு கிலோ நாட்டரிசியை ஒரு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக மக்கள் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களை மீட்பதும், குறைந்த செலவில் பொருட்கள் கொள்வனவு மூலம் அவர்களின் மனதை திருப்திப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ … Read more

இலங்கையின் தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இருக்கும் ஒரேயொரு வழி இது தான்!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சகல பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிவாயு, பால்மா, எரிபொருள், உரம் போன்றவற்றை மக்கள் கோரிய போது ஜனாதிபதியோ, … Read more

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்வனவு விலையானது 354.45 ரூபாவாக பதிவாகியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.  டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு  Source link