Coolie: `D.I.S.C.O… டிஸ்கோ…' அந்த வின்டேஜ் ரஜினி வசனம்; `தலைவர் 171' படத்தின் மிரட்டல் டீசர்!

சூர்யாவின் `ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் `வேட்டையன்’. இதையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 171வது படத்தில் நடிக்கிறார். தற்போது உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அமிதாப் பச்சன் கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினி, இப்படத்தை முடித்தக் கையோடு லோகேஷ் கனகராஜின் படத்திற்குச் செல்வதால், ‘வேட்டையன்’ படத்தின் … Read more

நடிகர் சங்கக் கட்டடம்: இன்று மீண்டும் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் – எப்போது முடிவடையும்?

ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட வேலைகள், இன்று மீண்டும் தொடங்கப்பட்டன. நடிகர் சங்கக் கட்டடம் என்பது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், புது நிர்வாகிகள், செயற்குழு எனப் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒன்று. நடிகர்கள் சங்கத்தின் வருவாயைப் பெருக்கவும், வளர்ச்சிக்காகவும் சொந்த கட்டடம் வேண்டும் என்பதைப் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்தனர். மீண்டும் தொடங்கிய நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் அதன் வரலாறு பத்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறாகும். கடந்த … Read more

கொளுத்தும் கோடை வெயில்; குளு குளு ஏசி… உடலுக்கு நல்லதா..? பாதிப்பு இல்லாமல் பயன்படுத்தலாமா?

உச்சம் தொட்டுவிட்டது வெயில். மற்ற நாள்களில் ஏசியை பயன்படுத்தாதவர்கள் கூட இப்போது ஏசியில் அதிகமாக இருப்பார்கள். கரன்ட் பில் டபுளாகி, மும்மடங்காகும். ஏசி இல்லாத வீடுகளாக இருந்தால் புதிதாக ஏசியும் வாங்குவார்கள். தொடர்ச்சியாக ஏசியை பயன்படுத்தும் இந்தக் காலத்தில், அதனை சரியாகப் பயன்படுத்துவது பற்றி அறிந்துகொள்வதும் அவசியம். பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சத்தையும், அது தொடர்பான மருத்துவரின் கருத்தையும் பார்ப்போம். ஏசி Doctor … Read more

Suriya: "தேவ் கராத்தேவுல மட்டுமில்ல ஒழுக்கத்துலயும் நம்பர் ஒன்தான்!" – நெகிழும் கராத்தே மாஸ்டர்

நடிகர் சூர்யா மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளார். ஜென் கராத்தே அகாடமியின் பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு, ஒரு தந்தையாக சூர்யா நேரில் சென்று ரசித்ததோடு, சக மாணவர்களையும் பாராட்டியது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து, சூர்யா மகன் தேவ்வின் கராத்தே மாஸ்டர் ‘ஹன்சி’ கேரிபாலாவிடம் பேசினேன்… மகன் தேவ்வுடன் சூர்யா “கடந்த ஒன்பது வருடமா தேவ் என்கிட்டதான் கராத்தே கத்துக்கிட்டு வர்றார். அவரோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கராத்தே க்ளாஸ் வந்ததைப் … Read more

விளையாட்டாக ஏறிய சிறுவன்; சரக்கு ரயிலில் 100 கி.மீ தூரம் தனியே பயணம்… நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிலிருந்து கடந்த 19-ம் தேதி ரோஸா (Roza) என்ற இடத்தை நோக்கி சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டிருக்கிறது. அந்த ரயில் ஹர்டோய் பகுதியை அடைந்தபோது, வழக்கம்போல ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ரயிலைச் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது, சரக்கு ரயிலின் இரண்டு சக்கரத்துக்கு நடுவில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்திருக்கிறான். இதைப் பார்த்து அதிர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள், சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். मालगाड़ी के पहियों के बीच बैठकर #हरदोई पहुँचा बच्चा … Read more

தமிழில் சொல்லப்படாத கதைகளைச் சொன்னவர் – இயக்குநர் `பசி' துரை காலமானார்!

புகழ்பெற்ற இயக்குநர் `பசி’ துரை இன்று இயற்கை எய்தினார். இவர் `அவளும் பெண்தானே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே வித்தியாசமான கருத்துகளால் தமிழ்த் திரை ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தார். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களின் படங்களை டைரக்ட் செய்ததோடு புதுமுகங்களையும் அறிமுகம் செய்து நடிக்க வைத்தார். ‘பசி’ படத்திற்காக அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. ‘பசி’ திரைப்படம் மிகவும் … Read more

`இந்துக்கள் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்..!’ மோடியின் சர்ச்சை பேச்சும் தாக்கமும்

2024 மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை பா.ஜ.க-வும், 400-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெறும் என்று தொடக்கத்தில் பேசியவந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவரது பேச்சில் தற்போது மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. தனது பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்காமல், மதரீதியிலான உணர்வைத் தூண்டும் வகையில் அவர் பிரசாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடுகிறார்கள். மோடி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் … Read more

"இது எங்க வீட்டுக் கல்யாணங்க!" – ஷங்கரின் மாப்பிள்ளை குறித்து நெகிழும் நடிகை நளினி

இந்தியாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கடந்தவாரம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சினிமா துறையைச் சேர்ந்த தருண் கார்த்திகேயன் என்பவரைக் கரம் பிடித்திருக்கிறார். முன்னதாக, இயக்குநர் ஷங்கரின் மருமகன் அவரின் உதவி இயக்குநர் என்று செய்திகள் பரவிய நிலையில், அவர் சினிமாவில்தான் இருக்கிறார், ஆனால் ஷங்கரின் உதவி இயக்குநர் இல்லை என்று தெரிவித்தனர். இப்படி ஷங்கரின் மருமகன் யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவிவந்தன. ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் உண்மையில் … Read more