பின் லேடனின் வலது கையாக இருந்த அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்: ஜோ பைடன்

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, மிகப்பெரிய பின்னடைவாக,  ஒசாமா பின் லேடனின் வலது கையாக இருந்த அதன் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் உத்தரவின் படி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த உலகளாவிய பயங்கரவாதி மற்றும் அல்-கொய்தா தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரியை ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தியது. இதை அமெரிக்க … Read more

பாகிஸ்தான் ராணுவ விமான ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி, இரண்டு மேஜர்கள், பாகிஸ்தான் கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் … Read more

ஒரே நாளில் 4000 நிலநடுக்கங்கள்! வெடிக்க காத்திருக்கும் எரிமலை

ஒரே நாளில் சுமார் 4,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் எரிமலை வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ஐஸ்லாந்து. ஆகஸ்ட் மாதம் முதல் நாளன்று ஏர்பட்ட இந்த நிலநடுக்கங்கள் வானிலையை மோசமாக்கியிருக்கிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு புதிய எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என்பது பற்றிய கவலையைத் தூண்டியுள்ள இந்த தொடர் நிலநடுக்கங்கள் மிதமானது முதல் கடுமையானது வரை பல்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. இது பூமிக்கு அடியில் மாக்மா இயக்கத்தால் ஏற்படலாம் என்றாலும், இந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களை … Read more

நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில்,  ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் ” ராணுவம் சும்மா இருக்காது” என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது.   தைவான் சீனாவின் … Read more

வீட்டை எரித்து விட்டு வீட்டிற்கு போகச் சொல்வதா? – போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கேள்வி

இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’Ranil go home’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே  “வீடு இல்லாத மனிதனை வீட்டிற்குச் செல்லச் சொல்வதில் அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார்.  தம்மை வீட்டுக்குச் செல்லக் கோருவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், மாறாக எரிந்த தனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப போராட்டக்காரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை சீரமைக்க … Read more

Russia Ukraine War: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Nibulon என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஒலெக்ஸி வடதுர்ஸ்கி (Oleksiy Vadatursky) மற்றும் அவரது மனைவி இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய தாக்குதலில் தம்பதியினர் பலியாயினர். 74 வயதான ஒலெக்ஸி வடதுர்ஸ்கி விவசாய நிறுவனமான நெபுலான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர்  இறந்து விட்டார் என்று மைகோலிவ் கவர்னர் விட்டலி கிம் கூறியதாக AFP செய்தி நிறுவனம் … Read more

மகனின் மரணத்திற்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடி; நீதிமன்றம் வழங்கிய கொடூர தீர்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களின் மோசமான நிலையை உணர்த்தும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரானில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி கோரிய தாய்க்கு நீதிமன்றம், கொடூரமான  தண்டனை விதித்துள்ளது. நீதி கேட்ட அந்த தாய்க்கு 100 கசையடிகள் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஜெருசலேம் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில், மெஹபூபா ரம்சானி என்ற அந்த தாய் தனது மகனைக் கொலை செய்த அதிகாரிகளை தண்டிக்க ‘மதர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்’  (‘Mother’s … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் – யார் இந்த ரிஷி சுனக்?

பிரிட்டன் பிரதமர் தேர்தல் ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தல் வழக்கத்தை விட இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்குக் காரணம் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்தவர் என்பதே. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் போரிஸ் ஜான்சன் தலைமை மீது அதிருப்தி எழுந்தநிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்து அவரது அரசுக்கு முடிவுரையைத் தொடங்கி வைத்தவர் ரிஷி … Read more

Long March 5B: சீனாவின் விண்வெளி ராக்கெட் பூமியில் விழுந்து நொறுங்கும்

புதிதாக ஏவப்பட்ட சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான லாங் மார்ச் 5Bயின் சிதைபாடுகள் பூமிக்குள்மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் சிதைபாடுகளின் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கூறும் சீனா, பூமியில் உள்ள எவருக்கும் சிறிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.  சீனா டியூன்ஹி என்ற பெயரில் பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக, கடந்த மாதம் 29 ஆம் தேதி, Long March … Read more

அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக … Read more