அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த துபாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.  இந்நிலையில், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர், முதலில் 4 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் சூப்பர் … Read more

மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா … Read more

Wheat Export Ban: இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்

உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு  G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட … Read more

'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இலங்கையில் வாழ்வது கடினம் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?

இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.  இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் இலங்கை போர்க்களமாக மாறியது.  மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் தீக்கரையாகின. மேலும், மஹிந்த … Read more

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள் BA 4 மற்றும் BA 5

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக … Read more

சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க ஜான்சன் உத்தரவு

அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது … Read more

உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன. சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க … Read more

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 … Read more