பிக்சல் போனில் 'ஆண்ட்ராய்டு 13' வெர்ஷனை வெளியிட்ட கூகுள்: விரைவில் அனைத்து போன்களிலும் அப்டேட்

பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களிலும் புதிய வெர்ஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களால் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக் சாம்ராட்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்த புதிய வெர்ஷனை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் லாங்குவேஜ் செட்டிங்ஸும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே ரோல் அவுட் செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியா @ 75: டிஜிட்டல் இந்தியாவும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியின்போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு மாற்றங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை கடந்த 75 ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக மாறியிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை ஆக்கபூர்வமான மற்றும் முன்னோக்கிய பார்வை கொண்டதாகவே … Read more

‘வேற்றுமையில் ஒற்றுமை’: சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்வை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுல் இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரத்தை தாங்கிப்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் ஒன்று கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை … Read more

ரியல் ‘சிட்டி’ – சியோமி அறிமுகம் செய்த ஹியூமனாய்டு ரோபோ: மதிப்பு ரூ.82 லட்சம்

மனிதர்களின் உணர்வுகளை உணரும் ஹியூமனாய்டு ரோபோவை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 லட்ச ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அப்படியே ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோவை நினைவுபடுத்துகிறது. அந்தப் படத்தில் டாக்டர் வசீகரன் எப்படி மேடையில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்து வைப்பாரோ, அதேபோல இந்த ரோபோவின் அறிமுகமும் நடந்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் ‘சைபர்ஒன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள 01.52 நிமிடங்கள் கொண்ட … Read more

இந்தியாவின் அடுத்த 5G புரட்சியை வழிநடத்தப்போகிறது ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையில் அடுத்த புரட்சியான 5G அலைக்கற்றையை அறிமுகப்படுத்தும் பணியில் இந்தியா அதிவேகமாக செயல்பட்டு‌ வருகிறது.அதற்கான ஏலம் சமீபத்தில் மத்திய அரசால் நடத்தப்பட்டது. அந்த ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 900 MHz, 1800 MHz, 2100MHz, 3300 MHz மற்றும் 26 GHz அலைவரிசைகளில் 19867.8 MHz ஸ்பெக்ட்ரத்தை வாங்க 43,084 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஏற்கனவே 5G சோதனையில் வெற்றிகரமாக முண்ணனியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒரு தொலைதொடர்பு புரட்சியையே நிகழ்த்த … Read more

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ G62 5ஜி ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ G62 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் G சீரிஸ் வரிசையில் G62 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது … Read more

இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் டைப்-சி சார்ஜிங் போர்ட்: அரசின் விருப்பம்?

இந்தியாவில் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையிலான டைப்-சி சார்ஜர் வேண்டும் என அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான சார்ஜிங் போர்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் அந்த துறை சார்ந்த நிறுவனங்களை சந்திக்க அரசு திட்டமிட்டுள்ளதாம். விண்டோஸ் 11 லேப்டாப், டேப்லெட், ஐபோன், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என அனைத்து சாதனங்களுக்கும் ஒரே வகையிலான சார்ஜிங் போர்ட்டை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு மற்றும் அது சார்ந்த திட்டங்களை … Read more

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4 மற்றும் சில சாதனங்கள் இந்தியாவில் அறிமுகம் | முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி Z ஃபோல்ட் 4, ஃப்ளிப் 4, வாட்ச் 5 சீரிஸ் மற்றும் TWS இயர்பட்ஸை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். ஸ்மார்ட்போன்களின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக மடக்கும் வகையிலான ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் போன்கள் பார்க்கப்படுகின்றன. இந்த போன்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் முயற்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவில் கேலக்ஸி … Read more

Jio recharge plan: 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோவின் அட்டகாசமான ஆஃபர் மழை!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்களை அறிவித்துள்ளது . அதில் 2999 ப்ரீப்பெய்டு ப்ளான் ஒன்றும்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 750 ரூபாய் மதிப்பில் எக்ஸ்ட்ரா டேட்டா மற்றும் 2250‌ ரூபாய் மதிப்பில் எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த ஆஃபர் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்துக் கொண்டு உடனே உங்கள் ஆஃபருக்கு முந்துங்கள். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. நாடு … Read more

புதிய பிரைவசி அம்சங்களை அறிமுகம் செய்த வாட்ஸ்அப் | முழு விவரம்

கலிபோர்னியா: பயனர்கள் பிரைவசி சார்ந்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். அந்த அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை … Read more