மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்: பெண் சக்திக்கு சான்று என பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளார். இது பெண் சக்திக்கான சிறந்த சான்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது பதிவில், “இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சமூக சேவை, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் … Read more

“இளம்பெண்களுக்கு சிறகுகள் வழங்க ஒன்றிணைவோம்” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “இளம்பெண்களின் பாதைகளில் உள்ள தடைகளை அகற்றி அவர்களுக்கு சிறகுகள் வழங்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் எக்ஸ் தளப் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள். நாரி சக்தியைக் கொண்டாடும் தருணம் இது. ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் விளையாட்டு தொடங்கி … Read more

ஆந்திராவில் உருவாகும் தேர்தல் கூட்டணி! பிரசாந்த் கிஷோரின் ஆருடம் பலிக்குமா? பொய்க்குமா?

2024 Lok Sabha Elections : ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பிராந்திய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பாஜக இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் என்ன?

சுமலதா vs நிகில்: மண்டியா யாருக்கு கிடைக்கும்?

கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான‌ சுமலதா சுயேச்சையாக‌ போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சித்த நிலையில், அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்க சுமலதா திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த வாரம் டெல்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை … Read more

மகளிர் தின சலுகை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, “இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு … Read more

‘சார் ஒரு செல்ஃபி’.. ஓகே சொன்ன பிரதமர்: உழைப்பால் உயர்ந்து உத்வேகம் அளிக்கும் காஷ்மீர் இளைஞன்

PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் பாஜகவில் இணைந்தார்

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அபிஜித் கங்கோபாத்யாய கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பாஜகவில் சேரப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த குமார் மஜும்தார், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகசட்டப்பேரவை கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அபிஜித் கங்கோபாத்யாய நேற்று பாஜகவில் இணைந்தார். முன்னதாக கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக … Read more

மகளிர் தினத்தன்று இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்! கேஸ் சிலிண்டர் விலை ரூ 100 குறைந்தது!

LPG cylinder prices by Rs100 : பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு என்று நிரூபிக்க மகளிர் தினத்தில் சமையல் எரிவாயு விலையை நூறு ரூபாய் குறைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிரதமர்!

டிரோன் தாக்குதலில் சிக்கிய கப்பலை மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: செங்கடல் மற்றம் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா மீதான தாக்கு தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களில், தாக்குதலுக்கு உள் ளான பல வணிக கப்பல்களுக்கு இந்திய கடற்படை உதவியது. இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பர்படாஸ் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ட்ரூ என்ற வணிக கப்பல் சென்றது. அதன் மீது … Read more

மாநிலங்களின் கொள்கை உருவாக்கத்துக்கு புதிய தளம்: நிதி ஆயோக் அறிமுகம்

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குழுவைகலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன் னெடுத்துச் செல்வதற்கான கொள்கைகளை பரிந்துரை செய்யும் பணியை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்கள் முக்கிய துறைகளில் சிறந்த திட்டங்களை வகுக்க உதவும் வகையில் ‘NITI for States’ என்ற புதிய தகவல் தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தொடங்கி வைத்தார். … Read more