“திமுக சொல்வதை காங்கிரஸ் ‘செய்கிறேன்’ என வாக்குறுதி கொடுக்கிறது” – ஸ்டாலின் பிரச்சாரம் @ சிதம்பரம்

சிதம்பரம்: “இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் திமுக சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது. இதுதான் சமூக நீதிக் கூட்டணி. ஏன் என்றால், சமூக நீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சிதம்பரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், மயிலாடு துறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது, … Read more

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Lok Sabha Elections 2024 : தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

பாஜக – பாமக கூட்டணி காலத்தின் கட்டாயம்: அன்புமணி @ தி.மலை

திருவண்ணாமலை: “பாமகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தமிழகத்தில் 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும்” என செய்யாறில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். ஆரணி மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இன்று(ஏப்ரல் 6-ம் தேதி) இரவு நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது … Read more

இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் நம் பிள்ளைகளை பார்த்தாலே பாஜக கதறுகிறது – ஸ்டாலின் சரவெடி!

CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

“சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டுவேன்” – ராதிகா வாக்குறுதி @ சிவகாசி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரில் பிரச்சாரம் செய்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவிடம், “கழிப்பறை இல்லை” என பெண்கள் புகார் அளித்த நிலையில், “என்னை வெற்றி பெற வைத்தால், சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டித் தருவேன்” என வாக்குறுதி அளித்தார். சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சிவகாசி பகுதியில் பட்டாசு முக்கிய தொழிலாக உள்ளது. பட்டாசு பிரச்சினை தொடர்பாக … Read more

‘பாஜக அரசின் 10 ஆண்டு பேரழிவுக்கு தீர்வே காங். தேர்தல் அறிக்கை’ – ஹைலைட்ஸ் பகிர்ந்த செல்வப்பெருந்தகை

சென்னை: “தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலைநகர் டெல்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டு கால மத்திய பாஜக … Read more

“பேசினால் மழை வரும் என்ற அண்ணாமலைக்கு ‘நோபல்’ வழங்கணும்” – செல்லூர் ராஜூ

மதுரை: “நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கிண்டலாக தெரிவித்தார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தவறான வார்த்தையையோ, கொச்சையான வார்த்தைகளையோ நான் ஒருபோதும் உபயோகப்படுத்த மாட்டேன். எல்லோரும் என்னை தெர்மகோல் ராஜ், தெர்மகோல் ராஜ் என்று என்னை ட்ரெண்ட் செய்து கிண்டல் செய்தார்கள். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நான் பேசினால் மழை வரும் … Read more

மது அருந்திவிட்டு பணியாற்றிய பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு பணியாற்றிய அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தருமபுரி ஒன்றியம் மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குணசேகரன்(57) என்பவர் பணியாற்றி வந்தார். இப்பள்ளிக்கு அண்மையில் மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மான்விழி பள்ளிப்பார்வை நிகழ்வுக்காக சென்றிருந்தார். அப்போது அப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் மது அருந்திவிட்டு பணியாற்றியது தெரிய வந்தது. எனவே, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. மேலும், அவர் … Read more

“பாஜகவுக்கு ராமதாஸ் பல்லக்கு தூக்குகிறார்” – முதல்வர் ஸ்டாலின் சாடல் @ விழுப்புரம் 

விழுப்புரம்: “சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பாஜக. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? மருத்துவர் ராமதாஸ். இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார். ஆனால், அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று விழுப்பரத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 5) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் … Read more

“பிரதமர் மோடி நடிகரை போல் வலம் வருகிறார்” – வாகை சந்திரசேகர் பேச்சு @ சிவகாசி

சிவகாசி: “300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார்” என சிவகாசியில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவரான நடிகர் வாகை சந்திரசேகர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி கந்தபுரம் காலனியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவை தேர்தல் மிக … Read more