நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 655 என்கவுன்டர்கள்; தமிழகத்தில் மட்டும் 14: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை காவல்துறை செய்த என்கவுன்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுன்டர்களுக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து வரும் வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சக இணையமைச்சர் நித்யானந்த ராய், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல் படி 2014 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 655 என்கவுன்டர்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக பட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 191 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதையடுத்து   உத்தரபிரதேசத்தில் 117, அசாமில் 50, ஜார்கண்டில் 49, ஒடிசாவில் 36 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 35, மகாராஷ்டிராவில் 26, பீகாரில் 22, ஹரியானாவில் 15, தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 14, ஆந்திரா மற்றும் மேகாலயாவில் தலா 9 மற்றும் ராஜஸ்தான்,டெல்லியில் தலா 9 மற்றும் தமிழகத்தை பொறுத்தவரை 14 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில்  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.