இந்தியா – இலங்கை தொடரில் புதிய மாற்றம் : பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு



இந்தியா – இலங்கை அணிகள் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் கோரிக்கையை ஏற்று டி20 தொடர் முதலில் நடத்தப்படவுள்ளது. 

அதன்படி  முதல் டி20 போட்டி  பிப்ரவரி 24 ஆம் தேதி லக்னோவிலும், 2வது டி20 வரும் 26ஆம் தேதி தர்மசாலாவிலும், அடுத்த நாள் 3வது டி20 அதே தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது.

முன்னதாக முதல் டெஸ்ட் தான் பகல் இரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது விராட் கோலியின் 100வது டெஸ்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் மொஹாலியில் நடைபெறுவதால் எந்த போட்டியில் விராட் கோலி தனது 100வது போட்டியை விளையாடவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.