காதலர் தின கொண்டாட்டத்தில் திளைத்த ஐஸ்வர்யா: கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!

தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோவை நேற்றைய தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் ஐஸ்வர்யா. அன்கித் திவாரி இசையமைத்துள்ள ‘முசாபிர்’ என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ரிலீசுக்கு முன்பே தெறிக்கவிடும் ‘வலிமை’: செம்ம குஷியில் அஜித் ரசிகர்கள்…!

இதன் புரோமோவை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, நான் என்ன சொல்வது… கடவுள் வழி காட்டுகிறார் என கேப்சன் கொடுத்துள்ளார். பலரும் ஐஸ்வர்யாவின் இந்த வீடியோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்பா
ரஜினிகாந்த்
வழியில் ஆன்மிகத்தில் மன அமைதி தேடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. தன்னுடைய ‘முசாபிர்’ பாடல் டீமில் உள்ள நபர்கள் தான் இந்த சர்ப்ரைஸை தனக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனைவியை பிரிந்த சோகத்தில்
தனுஷ்
இருக்கும் போது, ஐஸ்வர்யா நண்பர்களுடன் கேக் வெட்டி ஜாலியாக இருப்பது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியுள்ளது.

ஜெய் ரொம்ப நல்ல பையன்; நல்ல மியூசிக் டைரக்டர் என்ற பெயரும் வாங்குவார் – ஜெயபிரகாஷ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.