திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்: நாளை முதல் அமல்!

ஆந்திர மாநிலம்
திருப்பதி
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகிவந்த நிலையில் நாளை முதல் நேரடியாக விற்பனையாக உள்ளது.

இது தொடர்பாக திருமலை திருப்பதி
தேவஸ்தானம்
முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டிக்கெட் வெளியிட்ட 10 நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகின்றன. இதனால், இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், நாளை (15ம் தேதி) முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகளை திருப்பதியில் வழங்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் நாளை காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆதார் கார்டை வைத்து வழங்கப்பட உள்ளது.

இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 16ம் தேதி(புதன்கிழமை) காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து தினமும் 10 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.