மகாராஷ்டிரா: பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை சிக்கியதால் தவிக்கும் சிறுத்தை!

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டியை மீட்க வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாபூர் பகுதியில் சிறுத்தைக்குட்டி ஒன்று தென்பட்டது. காரில் சென்ற ஒரு நண்பர்கள் குழு வீடியோ பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலாகிவருகிறது. அதில் பிளாஸ்டிக் கண்டெய்னருக்குள் தலை மாட்டிக்கொண்ட சிறுத்தைக்குட்டி சிரமப்பட்டிருக்கிறது. அவர்கள் அதனைக் காப்பாற்ற அருகே சென்றபோது அது காட்டுக்குள் ஓடிவிட்டது. சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவைப் பார்த்த மகாராஷ்டிரா வனத்துறையினர், சிறுத்தைக்குட்டியை காப்பாற்ற அதைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.