#சற்றுமுன் || நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத், கஞ்சா வைத்திருந்ததாக கைது.! 

புதுக்கோட்டை அருகே கஞ்சா வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை நகராட்சி வேட்பாளர் ஒருவரை, போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி 23 வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத், தற்போது கஞ்சா வைத்திருந்ததற்காக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வேட்பாளரின் நண்பர் முரளி மற்றும் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத் உள்ளிட்ட ஆறு பேரிடம் இருந்து, சுமார் எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.