ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் மரணம் <!– ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் … –>

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2வது  வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அழகேசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சுந்தராம்பாளையத்தை சேர்ந்த அழகேசன்  தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் டீ கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அழகேசனை அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகேசன் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐயப்பன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.