சொன்னா கேட்க மாட்டேங்கீளா தனுஷ்?: கடைசி அஸ்திரத்தை பயன்படுத்திய ரஜினி

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு தான் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் மீண்டும் சேர்வார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியமாப் போச்சா என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டிருக்கிறார்.

அப்பாவின் கோபத்தால் மனம் மாறிய ஐஸ்வர்யா தற்போது மீண்டும் பிரிவு முடிவில் உறுதியாக இருக்கிறார். தனுஷுக்கு போன் செய்த ரஜினிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஐஸ்வர்யாவுடன் சேர
தனுஷ்
தயாராக இல்லை.

இந்நிலையில் மூத்த மகன் யாத்ரா தன் அப்பா தனுஷுடன் இருக்கிறார். ரஜினி வீட்டில் இருந்த யாத்ரா தற்போது தனுஷுடன் இருப்பதை பார்த்தவர்களோ, ரஜினி தன் கடைசி அஸ்திரத்தை பயன்படுத்திவிட்டார் என்கிறார்கள்.

யாத்ரா ரொம்ப அறிவான பையன். அவரை அனுப்பி தனுஷிடம் பேச வைத்தால் நிச்சயம் மனம் மாறிவிடுவார் என்று நம்பினார் ரஜினி. இந்நிலையில் தான் யாத்ரா தன் அப்பாவுடன் நேரம் செலவிடுகிறார்.

மகன்களுக்காக தனுஷ் மனம் மாறுவது கடினம் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டபோது மகன்களுக்காக பொறுத்துப் போனாராம் தனுஷ்.

சிவகார்த்திகேயனும், நயன்தாராவும்: இந்த மேட்டர் தெரியுமோ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.