உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் பலி.! <!– உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுக… –>

உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர்.

ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்தனர். டோனேடெஸ்க் மாகாணத்தில் உள்ள ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அரசின் தலைவரான டெனிஸ் புஷிலின் முழு அளவில் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் எல்லையருகே அந்நாட்டு ராணுவத்திற்கும் பிரிவினைவாத படைகளுக்கும் இடையே  வன்முறைத் தாக்குதல்களும் மோதல்களும் அதிகரித்துவருகிறது. இதனைப் பயன்படுத்தி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.