குடும்ப தகராற்றால் செவிலியர் அடித்து கொலையா? காவல்துறை தீவிர விசாரணை..!

செவிலியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வயிறு வரை சேர்ந்தவர் வளர்மதி இவர் அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் அங்குள்ள விவசாய நிலம் ஒன்றில் உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவ்வழியே சென்ற மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது மனைவி ப்ரீத்தி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார், எனவும் அதற்கு வளர்மதி தான் காரணம் என்று குடும்பத்தினர் அவர் மீது கோபமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் ப்ரீத்தி குடும்பத்தினர் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் செவிலியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.