உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு <!– உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு –>

உக்ரைன் -ரஷ்யா விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மமதா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், இது போன்ற சர்வதேச நெருக்கடி சமயங்களில் உள்நாட்டு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேசமாக ஒன்றிணைந்து நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா சர்வதேச அமைதியை விரும்புவதாகவும், எல்லை தாண்டிய படையெடுப்பை நிராகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மமதா, தற்போதைய நெருக்கடி நிலையில், பிரதமர் மோடி சிறந்த ராஜாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வார் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.