கஞ்சா போதையில் கோவில் பூசாரியை 2 இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் <!– கஞ்சா போதையில் கோவில் பூசாரியை 2 இளைஞர்கள் தாக்கும் சிசிட… –>

புதுச்சேரியில் கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், கோவில் பூசாரி ஒருவரை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி கோவில் முன் படுத்திருந்த சுப்பிரமணியனை, கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள் அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கிவிட்டும் தப்பிச்சென்றனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், சுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சுப்பிரமணியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.