கிரைம் கார்னர்| Dinamalar

நீரில் மூழ்கி இருவர்கள் பலி

துமகூரு சிரா, எம்.தாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கராஜு, 27, இவரது தம்பி ஹனுமந்தராஜு, 21, நேற்று காலை, மாடுகளை குளிப்பாட்ட ஏரிக்கு சென்றனர். அப்போது தம்பி கால் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற அண்ணன் முயற்சித்ததால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கஞ்சா விற்றவர் கைது—பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், காலியிடத்தில் நேற்று முன் தினம் இரவு, கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று சோதனையிட்ட போலீசார், ஆந்திரா விசாகப்பட்டினம் வந்தலு கேசவராவ், 50, என்பவரை கைது செய்தனர். 65 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.* விபத்தில் இன்ஜி.,

மாணவர் பலி

பெங்களூரு விஜயநகரின், ஹொசஹள்ளியை சேர்ந்த யதீஷ்குமார், 23, இறுதியாண்டு பி.இ., படித்தார். இவர் நேற்று முன் தினம், காமாட்சி பாளையாவின், தனியார் ஓட்டல் அருகில் பைக்கில் செல்லும் போது, வேகத்தடை இருப்பதை கவனிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து விழுந்து உயிரிழந்தார்.

டிவைடரில் மோதி

ஓட்டுனர் பலி—பெங்களூரின் ஓசூர் சாலையின், வீரசந்திரா ஜங்ஷன் அருகில், நேற்று காலை சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடரில் மோதியது. இதில் அதை ஓட்டி வந்தவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.