உக்ரைனியர்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரருக்கு அவர்கள் கேக் வழங்கும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது.
உக்ரைனின் நோவி பக் நகரில், பாதையை தவறவிட்ட ரஷ்ய வீரர் ஒருவர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தார். அவருக்கு கேக் மற்றும் பானங்களை கொடுத்து உக்ரைனியர்கள் உபசரித்தனர்.
பின்னர் அங்கிருந்த பெண்மனி ஒருவரின் அலைபேசி மூலம் ரஷ்யாவில் உள்ள தனது தாயாரிடம் அவர் கண்ணீர் மலக உரையாடினார்.
ரஷ்ய வீரர்கள் பழைய வரைப்படங்களை பயன்படுத்துவதால் பாதை மாறி சென்று விடுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த உக்ரைன் சிறப்பு படையினர், இதற்கு மேல் ரஷ்ய வீரர்களுக்கு கருணை காட்ட முடியாது என எச்சரித்திருந்தனர்.
அதே சமயம், உக்ரைனில் சிறைப்படுத்தப்படும் ரஷ்ய வீரர்களை அவர்களின் தாய்மார்கள் வந்து அழைத்து செல்லலாம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.