தென்கொரியாவில் ஒரே நாளில் 2.19 லட்சம் பேருக்கு கொரோனா

சியோல்,
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் ஒமைக்ரான் தொற்றின் எதிரொலியால் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், நேற்று அது 2 லட்சத்தை தாண்டியது.
அந்த வகையில் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 241 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஒரே இரவில் பாதிப்பு கிட்டத்தட்ட 2 மடங்குக்கு உயர்ந்துள்ளது. 
நேற்றைய பாதிப்பை தொடர்ந்து அந்த நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 96 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகினர். இதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 8,266 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.