உக்ரைன் விவகாரம்: பிரதமர் ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

உக்ரைனில், ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில், ரஷ்ய படைகளின் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மாணவர் குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த சம்பவத்தை மத்திய அமைச்சர் விகே சிங் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு செயலர் ஹர்ஷ்வர்தன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர். இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.