எரிபொருள் பிரிவிற்காக புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் , விமானத்திற்கான எரிபொருள், திரவ நிலை எரிவாயு மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் உட்பட மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை சட்ட விதிகளின் கீழ்  நடைமுறைப்படுத்தப்படும்  போது  பரவலாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறை இன்மைச் செயற்பாடு காணப்படுகிறது. 

தனியார் நிறுவனங்கள் பல எரிபொருள் உற்பத்தி இறக்குமதி மற்றும் விநியோகம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இந்தப் பிரிவின் அனுபவங்களுக்கு தீர்வு தேடும் விதமாக உற்பத்தியின் தரத்தை  அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்டவர்களின் தேவைகளை பாதுகாப்பதற்காக சுயாதீன, ஆற்றல் மிக்க, பயனுள்ள, வினைத்திறனான ஒழுங்குபடுத்தப்பட்ட பொரிமுறை ஒன்றின் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

 அவ்வாறு அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை முன்வைத்தல் மற்றும் சட்ட வரையறைக்குள் அதனை தயாரித்தல் என்பவற்றுக்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழு ஒன்றை நியமிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.