எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடன் அதிகரிக்குமாறு கோரிக்கை



இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று கூடி, அதன் தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க பல முன்மொழிவுகளை முன்வைத்தது.

அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, உடன் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.