ரஷ்யாவின் குலைநடுங்க வைக்கும் திட்டம்: கசிந்த ஆவணங்களால் ஸ்தம்பித்த உக்ரைன்


உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்க ரஷ்யா அதிர்ச்சி திட்டமொன்றை இனிவரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் மாவட்டங்கள் சில இதுவரை சரணடைந்துள்ளன.
குறித்த தகவல்கள் ரஷ்யாவால் உறுதி செய்யப்பட்டாலும், உக்ரைன் தரப்பில் ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனர்.

மட்டுமின்றி, உக்ரைன் மக்கள் தெருக்களில் இறங்கி, ரஷ்ய துருப்புகளை தடுத்து நிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் வகையில், ரஷ்ய துருப்புகளால் கைப்பற்றும் உக்ரைன் நகர மக்களை பொதுவெளியில் தூக்கிலிடும் கொடூர திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை நிபுணர்கள் குறித்த திட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கசிந்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.   

இது ரஷ்ய படையெடுப்பை துணிந்து எதிர்த்துவரும் உக்ரைன் மக்களின் மன உறுதியை குலைக்கும் என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புட்டினின் படையெடுப்பின் எட்டாம் நாள், ரஷ்ய துருப்புக்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள நகரத்தில் டாங்கிகளுடன் நுழைந்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருதரப்பினரும் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். உக்ரைன் துருப்புகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாலையே, உயிர்ப்பலி அதிகரித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையிலேயே அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள நகரத்தில் ரஷ்ய துருப்புகள் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

ரஷ்யாவின் கொடூர திட்டம் தொடர்பில் தகவல் வெளியான நிலையில் அப்பாவி உக்ரைன் பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.