தலைக்கு 300 டாலர்.. கூலிப்படையை களம் இறக்கும் ரஷ்யா.. அதிர வைக்கும் "ஷாக்" திட்டம்!

சிரியாவில் தனக்கு உதவிய கூலிப்படை வீரர்களை உக்ரைனிலும் களம் இறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ரஷ்யாவில் போரில் ஈடுபட்டபோது அந்த நாட்டின் சூழலை நன்கு அறிந்த, பணம் பெற்றுக் கொண்டு போரிடும் வீரர்களை பெருமளவில் பயன்படுத்தியது ரஷ்யா. இதனால் தனது தரப்பில் இழப்பை அது தவிர்த்தது. இதுதான் சிரியப் போரில் ரஷ்யாவுக்கு நல்ல பலனையும் கொடுத்தது.

இந்த நிலையில் அதே உத்தியை இப்போது உக்ரைனிலும் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது. இந்த
கூலிப்படை வீரர்கள்
, நகர்ப்புறங்களில் நன்றாக யுத்தம் செய்யக் கூடியவர்கள். அதில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். அவர்களை உக்ரைனில் களம் இறக்கினால் உக்ரைன் படையினரை சமாளிக்க உதவியாக இருக்கும் என்றும் ரஷ்யா கருதுகிறது.

இதுதொடர்பான தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.. உக்ரைன் நகரங்களில் தரை மார்க்கமாக தீவிரமான சண்டைக்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும், அதற்கு இந்த
சிரிய வீரர்கள்
உதவுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எல்லோரும் பயந்தது நடக்கப் போகுது.. முழு வீச்சில் உக்ரைனைத் தாக்கத் தயாராகும் ரஷ்யா

எத்தனை கூலிப்படை வீரர்கள் களம் இறங்கப் போகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கில் அவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் பலர் ஏற்கனவே ரஷ்யாவுக்கு வந்து விட்டனராம். போர் முனைக்கு இவர்கள் விரைவில் அனுப்பப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீரர்களுக்கு கொரில்லா யுத்தத்தில் நல்ல அனுபவம் உள்ளது. இவர்களுக்கு 200 முதல் 300 டாலர்கள் வரை ஊதியமாக தரப்படுமாம். ஆறு மாத காலம் இவர்கள் பணியில் இருப்பார்களாம். சிரியப் போர் நீண்ட காலம் நடந்தது. அதாவது 10 வருட காலம் நடந்த தாக்குதல் அது. எனவே சிரிய வீரர்களுக்கு நகர்ப்புற சண்டையில் நல்ல அனுபவம் உள்ளது. எனவேதான் அவர்களை ரஷ்யா களம் இறக்கத் தீர்மானித்துள்ளதாம்.

முன்னாள் இஸ்ரேல் வீரர்களும் ரெடி

முக்கிய நகரங்களைப் பிடிக்க இவர்கள்தான் சரியாக வருவார்கள் என்பது ரஷ்யாவின் திட்டம். கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைப் பிடிக்க இவர்களின் உதவியை தற்போது அது நாடியுள்ளது. இது இப்படி இருக்க இஸ்ரேல் நாட்டு முன்னாள் வீரர்கள் பலர் உக்ரைனுக்காக போர் புரிய விருப்பம் வெளியிட்டுள்ளனராம். உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி யூத இனத்தைச் சேர்ந்தவர். அந்த வகையில் யூத அதிபருக்காக போரிட தாங்கள் ஆர்வமாக இருப்பதாக இஸ்ரேல் முன்னாள் வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

இசையில் மூழ்கும் உக்ரைனியர்கள்.. கீவ் நகரை சிதறடிக்க தயாராகும் ரஷ்யா!

மறுபக்கம் உக்ரைனுக்கு ஆதரவாக நிதியுதவிகள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்து 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உறுதி கொடுத்துள்ளது. அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்காமல் நடக்க இந்த உதவியைச் செய்வதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது, ஓய்வூதியங்களை வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர இந்த நிதியுதவி உதவும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 290 மில்லியன் டாலர் நிதியுதவியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. அது போக தற்போது 100 மில்லியன் டாலர் நிதியை கூடுதலாக அது வழங்கவுள்ளது. உலக வங்கி மூலம் இந்த நிதியுதவியை இங்கிலாந்து வழங்குகிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் கூட இதேபோல நிதியுதவி அளித்து வருகின்றன.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

இதற்கிடையே, கார்கிவ் நகருக்கு அருகே போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது எந்த இடம் என்று தெரியவில்லை. எந்த நாட்டு போர் விமானம் என்றும் தெரியவில்லை. ஆனால் இது ரஷ்யாவின் சுகோய் 25 ரக போர் விமானம் போலத் தெரிவதாக உக்ரைன் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. உக்ரைன் நாட்டுப் படையினர்தான் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் இதை சுட்டு வீழ்த்தியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

உக்ரைன் கைக்கு வந்த “அமெரிக்க ஏவுகணை”.. 200 ரஷ்ய பீரங்கிகள் காலி.. உக்கிரமாகும் யுத்தம்!

போர் தொடங்கியது முதல் இதுவரை 80 ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் ஏற்கனவே கூறியுள்ளது. இதன் காரணமாகவே ரஷ்யாவும் தனது விமானப்படையை முழு அளவில் இறக்காமல் அமைதி காத்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் உக்ரைன் தனது நாட்டு விமானப்படையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. ரஷ்யத் தரப்பிலிருந்து பெரிய அளவில் விமானப்படை பயன்படுத்தப்படாமல் இருப்பதால் உக்ரைன் வான்வெளி அந்த நாட்டுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி
உக்ரைன் போர்
விமானங்கள் ரஷ்யப் படைகளை அவ்வப்போது தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.