நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் குடும்பத்தலைவி பெயரில் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் இனி குடும்பத்தலைவியின் பெயரில் தான் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர், அக்கட்சியின் மகளிரணி இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெண்களின் மேம்பாட்டிற்கு கை கொடுத்துள்ளதாகவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்கான நடவடிக்கை அது என்றும் தெரிவித்தார்.

மேலும், அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்வோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.