நயன்தாராவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே மலையாள படம் மூலம் நடிகையானார் நயன்தாரா. ஜெயராம் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கௌரி என்கிற கதாபாத்திரத்தில்
நயன்தாரா
நடித்தார்.

படத்தின் முக்கிய அம்சமாக ஷீலாவின் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைத்தார் இயக்குநர் சத்யன் அந்திக்காடு. அதனால் கௌரி கதாபாத்திரத்தில் புதுமுகம் தான் நடிக்க வேண்டும் என்றார் சத்யன்.

அந்த நேரத்தில் நயன்தாரா ஒரு மாடல் அழகியாக இருந்தார். விளம்பர படங்களில் நடித்து வந்தார். அவர் நகைக்கடை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்த புகைப்படம் பிரபல பத்திரிகை ஒன்றில் வந்திருந்தது. அதை பார்த்த சத்யன், இந்த பெண் தான் கௌரி என்று கூறி அவரை நடிக்க வைத்தாராம்.

சத்யன் கேட்டதுமே, கௌரியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. பத்திரிகை படத்தால் நயன்தாராவுக்கு நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது.

இன்று லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நயன்தாரா. கெரியரை பொறுத்தவரை தன் காதலரான
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து
காத்து வாக்குல ரெண்டு காதல்
படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா.

நல்ல வேளை, நயன்தாராவின் காதல் முறிஞ்சுடுச்சு: ரசிகர்கள் ஹேப்பி
அந்த படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் தலைவர் 169 படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடித்தார்.

தலைவர் 169 படத்தில் நயன்தாரா வேண்டாம், வேறு யாரையாவது நடிக்க வைக்குமாறு ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.