உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் 20 லட்சம் பேர் அகதிகளாக மாறிய பரிதாபம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் சுமார் 20 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் இல்வா ஜோஹன்சன், இந்தப் போர் விரைவில் முடிவடையாது எனக் குறிப்பிட்டார். ரஷ்ய அதிபர் புதின் கருணை இல்லாமல் போரை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் பல லட்சக்கணக்காக மக்கள் அகதிகளாக வருவார்கள் என்று தெரிவித்த இல்வா ஜோஹன்சன், அவர்களை வரவேற்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.