ஜாலியாக இருக்க.. தாலியை கட்டி.. அனுபவித்துவிட்டு மாயமான நாடக காதலன்.! பொடிவைத்து பிடித்த போலிசார்.!

கோவை மாவட்டத்தில் பிரபாகரன் என்ற நபர் சில மாதங்களுக்கு முன் ஆந்திராவிற்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கு தங்கி வேலை பார்த்த பொழுது அவருக்கு ஒரு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது

அவரிடம் காதலிப்பதாக தெரிவித்து நான்கு மாதங்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். திடீரென்று அங்கு இருந்து பிரபாகரன் மாயமாகியுள்ளார். தனது கணவரை காணாமல் பெண் தேடி அலைந்து பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் ஆந்திர மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், பிரபாகரனின் சொந்த ஊர் என்பதால் இதுகுறித்து கோவை மாவட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட காவல் துறையினருக்கு பிரபாகரன் ஜாமின் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு பிரபாகரன் தம்பி வந்தபோது அவரை மடக்கிப்பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை வைத்து பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.