ரூ.1 லட்சம் கோடி வழங்குகிறது அமெரிக்கா| Dinamalar

ரூ.1 லட்சம் கோடி வழங்குகிறது அமெரிக்கா

உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ள உதவி தொகையில் ஒரு பகுதியாக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக அளிக்கும் மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறியது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நிலவும் போர் சூழலால், அந்நாட்டில் இருந்து 20 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘உக்ரைனுக்கு உதவ 112 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி இந்த ஆண்டில் வழங்கப்படும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.இந்த தொகை உக்ரைனுக்கு மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் நிவாரணத்துக்காகவும், கொரோனா பெருந்தொற்று சவால்களை எதிர்கொள்ளவும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் ஒரு பகுதியாக 1 லட்சம் கோடி ரூபாய் தொகையை உடனடியாக அளிக்க அமெரிக்க பார்லி.,யில் மசோதா நிறைவேறியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.