பெண்கள் பாதுகாப்புக்கு பாஜக ஆட்சி: ஸ்மிர்தி இராணி தகவல்!

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும்
பாஜக
ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதனை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இந்த நிலையில், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர்
ஸ்மிர்தி இராணி
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள். எங்கள் பெண் தொண்டர்களை பலாத்காரம் செய்கிறீர்கள். பின்னர் நாங்கள் சர்வாதிகாரி என்று சொல்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திருடியது தொடர்பான
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு பற்றிய அவர்களது குற்றச்சாட்டு அவர்களின் தோல்வியை மறைப்பதற்கு அவர்கள் சொல்லும் வெறும் ஒரு சாக்குப்போக்கு என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆட்சிக்கு வர பிரிவினைவாத சக்திகளின் ஆதரவை பெற்றார். பஞ்சாபில் அடுத்த அரசாங்கம் பாஜக தலைமையில் அமைக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றும் ஸ்மிர்தி இராணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.