1.7 கோடி பேர் வசிக்கும் நகரை பூட்டியது சீனா| Dinamalar

பீஜிங்: சீனாவில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழில்நுட்ப நகரமான ஷென்ஜென் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கோவிட் உருவான சீனாவில், சமீபத்தில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால், அந்நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது.
அந்நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹூவாய் மற்றும் டான்சென்ட் ஆகியவற்றின் மையமாக விளங்கும் ஷென்ஜென் நகரில் 66 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், 1.7 கோடி பேர் வசிக்கும் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

ஹாங்காங் அருகில் உள்ள இந்நகரில், ஒமைக்ரான் பரவல் காரணமாக ஏற்கனவே அத்தியாவசியம் இல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் ஓட்டல்களில் உணவருந்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.