திருவிழாவைக் காணச்சென்ற பெண்ணிடம் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளைஞர்கள் பாலியல் வன்முறை..!

மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் மாவட்டத்தில் திருவிழாவைக் காணச் சென்ற பெண்களிடம் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர்கள் சிலர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீற முயன்றதால், அந்தப் பெண் வாகனத்தின் பின்னால் பதுங்கியபோதும், விடாமல் சென்று இரண்டு பேர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தில் இருந்த யாரும் அதனைத் தடுக்க முயலாமல், செல்போன்களில் படம் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 இளைஞர்களைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவன், அதை இணையத்தில் வைரலாக்கியவன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.