போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல்

உக்ரைனில் தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளராக பியர் ஜாக்ர்ஸெவஸ்கி, கீவ் நகருக்கு வெளியே வாகனத்தில் செல்லும் போது குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

லண்டனை சேர்ந்த பியர் ஜாக்ர்ஸெவஸ்கி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சக ஊழியரான ஒளிப்பதிவாளர் பெஞ்சமின் ஹாலும் பலத்த காயமடைந்தார். ஏற்கனவே ஒரு செய்தியாளர் போர்க்களத்தில் உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

இதனிடையே உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.