விஜய்க்கு போட்டியாக வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? பிரபல தயாரிப்பாளர் பளீச் பதில்!

சினிமா சார்ந்த நிகழ்வுகள் குறித்து அதிரடியான கருத்துக்களை கூறி வருபவர் தயாரிப்பாளர் கே ராஜன். இந்நிலையில சமயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த
கே ராஜன்
, பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, சமீப காலமாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிக படங்களை வாங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே ராஜன், நல்ல விளம்பரம் கிடைக்கும் என கொடுக்கிறார்கள். சன்பிக்சர்ஸும் ரெட் ஜெயண்ட்டும் உறவுகள்தான்.

‘பாகுபலி’க்கு இப்படி ஒரு சோதனையா… மரண அடி வாங்கிய ராதே ஷ்யாம்!

உதயநிதி மக்களை மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ படங்களை வாங்க வில்லை. அவர் ஒரு ரூட்டில் செல்கிறார். படங்களில் நடிக்கிறார். மக்களை சந்திக்கிறார் என்றார். தொடர்ந்து பெரிய டீம்முடன் அவர் படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறித்தும் விஜய்க்கு போட்டியாக உதயநிதியை கொண்டு வரப்பார்க்கிறார்களா என்ற கேள்விக்கும் பதில் அளித்த கே ராஜன், அப்படியெல்லம் இல்லை. அவருக்கு நல்ல இயக்குநர்கள் அமைந்துள்ளனர் என்றார்.

மேலும் சாதாரண ஹீரோ கூட பெரிய இயக்குநர் மற்றும் இசையமைப்பாளரை வைத்து படம் பண்ணலாம் என்ற கே ராஜன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணுகிறார்கள் என்பதெல்லாம் நாமாக கற்பனை செய்து கொள்வதுதான். தன்னை தானே புரமோட் செய்து கொள்வதில் என்ன தவறு? நல்ல இயக்குநருடன் படம் பண்ணும் போது நன்றாக தான் இருக்கும் என்றார்.

சினிமாத்துறையில் அதிகரிக்கும் விவாகரத்து… சபல புத்திதான் காரணம்… விளாசிய தள்ளிய பிரபலம்!

மேலும் பீஸ்ட் ஆடியோ லாஞ்சில் நடிகர்
விஜய்
அரசியல் பேசுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கே ராஜன், நிச்சயம் பேசமாட்டார். மெர்சலுக்கு பிறகு அவர் அரசியல் பேசவில்லை. நெய்வேலியில் இருந்து அவரை கூட்டி வந்த பிறகு அவர் பின்னெடுத்துவிட்டார். அடுத்து வந்த 2 படங்களிலும் அவர் அரசியல் பேசவில்லை. அதை வைத்து தான் சொல்கிறேன், அவர் அரசியல் பேசமாட்டார் என அடித்து கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.