9 வருஷத்துக்கு அப்புறம் நடக்க போற நல்ல விஷயம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செம்ம குஷி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள், இயக்குநர், பாடகி என பல அடையாளங்களை கொண்டவர் ஐஸ்வர்யா. இவர் தற்போது ‘
முசாபிர்
‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடல் நாளை வெளியாக உள்ளதால் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக அப்டேட் வழங்கி வருகிறார் ஐஸ்வர்யா.

தனுஷை பிரிந்ததை தொடர்ந்து தனது வேளைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இவர், மீண்டும் உடல்நலக் குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலும் திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாமல் போனது.

தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ படங்களை தொடர்ந்து எந்த படங்களையும் இயக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார் ஐஸ்வர்யா. இந்தப்பாடல் கடந்த காதலர் தினத்தன்றும், மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விக்ரம் நல்ல நடிகர்லாம் கிடையாது: பிரபல இயக்குனரின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆனால் கொரோனா, உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டப்படி ‘முசாபிர்’ பாடல் வெளியிடப்பட முடியாமல் போனது. இந்நிலையில் நாளை இந்த ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இறுதியாக காத்திருப்பு முடிந்தது. 9 வருட இடைவெளிக்குப் பிறகு எனது முதல் சிங்கிள் பயணி நாளை வெளியாகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னால் காத்திருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 9 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கத்தில் குதித்துள்ள ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலுக்கு குஷ்பு, சுஹாசனி, ராதிகா, பிரபுதேவா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.