சித்துவுடன் போட்டோ எடுத்தாரே ஹர்பஜன் சிங்.. எம்.பி.யாகிறார்.. ஆனால் கட்சி வேற!

லெப்ட்டில் போவது போல போய் இப்போது ரைட்டில் டர்ன் செய்யப் போகிறார்
ஹர்பஜன் சிங்
.
பஞ்சாப்
காங்கிரஸ் தலைவராக
நவ்ஜோத் சிங் சித்து
இருந்தபோது அவரைப் பார்த்து போட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டார் ஹர்பஜன் சிங். இப்போது அவர்
ஆம் ஆத்மி
கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பை கொடுக்கவும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாம். சித்துவிடம் நெருக்கமாக இருந்த ஹர்பஜன் சிங் இப்படி அதிரடியாக ஆம் ஆத்மியால் வளைக்கப்படுவது பஞ்சாபில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் தொடர் அதிரடிகளைக் காட்ட ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றாக ராஜ்யசபா தேர்தலில் பஞ்சாபிலிருந்து ஹர்பஜன் சிங்கை களம் இறக்க மான் திட்டமிட்டுள்ளாராம். கெஜ்ரிவாலும் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.

ஹர்பஜன் சிங், ராஜ்யபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்கு ஏற்கனவே எம்.பியாக இருந்து வரும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருடன் இணைவார். தற்போது ஹர்பஜன் சிங்குக்கு 41 வயதாகிறது. ராஜ்யசபா எம்.பி. பதவி தொடர்பாக ஹர்பஜன் சிங்கை, ஆம் ஆத்மி தலைவர்கள் அணுகியுள்ளனர். முதல்வர் பகவந்த் மானே இதுதொடர்பாக ஹர்பஜனிடம் பேசியுள்ளாராம்.

ஹர்பஜனுக்கு ஏற்கனவே அரசியல் ஆசை உண்டு. ஆனால் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார். அவர் சித்துவின் மூலம் காங்கிரஸில் இணையலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதை அவர் அப்போது மறுத்து விட்டார். தற்போது ஆம் ஆத்மி அவரைத் தேடி வந்துள்ளது. இதை ஹர்பஜன் சிங் ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.