தனுஷ் செய்ததை ஐஸ்வர்யா செய்யவில்லை..பிரிவிற்கு பின் முதல்முதலாக பேசிக்கொண்ட தனுஷ்- ஐஸ்வர்யா..!

சினிமா வட்டாரங்களிலும், சமூகத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவைப்பற்றி தான். என்னதான் இவர்கள் பிரிவை அறிவித்து பல நாட்கள் ஆனாலும் இன்னமும் ரசிகர்கள் அவர்களைப்பற்றி பேசித்தான் வருகிறார்கள்.

தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
பிரிவதாக அறிவித்தாலும் இருவரும் விவாகரத்தை பெறுவதாக அறிவிக்கவில்லை. எனவே இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக பலர் கருதுகின்றனர்.

தனுஷின் மீது உச்சகட்ட கோபத்தில் கஸ்தூரி ராஜா..!

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் நேற்று ஒரு பதிவை போட்டுள்ளார். ஐஸ்வர்யா இயக்கிய பயணி எனும் ஆல்பம் பாடல் நேற்று வெளியானது. அப்பாடலை நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமாகிய ரஜினிகாந்த் வெளியிட்டார். அவரைத்தொடர்ந்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகர்களான
மோகன்லால்
, அல்லு அர்ஜுன்,
மகேஷ் பாபு
ஆகியோரும் இப்பாடலை ஷேர் செய்து ஐஸ்வர்யாவை வாழ்த்தினார்கள்.

ஐஸ்வர்யா

இவர்களைப்போலவே தனுஷும் ஐஸ்வர்யாவை வாழ்த்தினார். ட்விட்டரில் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்களை சொன்ன தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டார். இது சமூகத்தளத்தில் பேசும்பொருளாக மாறியது. பலரும் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் போது தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் தனுஷிற்கு ஐஸ்வர்யா பதிலளித்துள்ளார். தனுஷின் டீவீட்டுக்கு நன்றி தனுஷ் , தெய்வீகம் என பதிலளித்துள்ளார். ரசிகர்கள் இந்த டீவீட்டை பார்த்து நல்ல வேளை ஐஸ்வர்யாவும் தோழர் என குறிப்பிடவில்லை என கூறிவருகின்றனர். மேலும் விவாகரத்திற்கு பிறகு முதன்முறையாக இவர்கள் பேசிக்கொண்டதால் இந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகின்றது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.