சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மயக்கவியல் மருத்துவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மயக்கவியல் மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த இசாம் என்பவர் பெங்களூரு சென்று விட்டு காரில் தனது உறவுக்கார பெண்கள் இருவருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த ஐய்யனூர் வழியாக அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் வந்துவிட்டதால் அவர் மீது மோதாமல் இருக்க இசாம் பிரேக்கை அழுத்தியபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

அதில் அந்த கார் அருகே இருந்த செண்டர் மீடியன் மீது ஏறி பக்கத்து சாலைக்குள் நுழைந்தபோது, வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த மயக்கவியல் மருத்துவர் சுரேஷ் குமார் என்பவரது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் மருத்துவரது காரின் முன்பகுதி நசுங்கி சேதமடைந்ததுடன் உள்ளே இருந்த மருத்துவருக்கும் பலமாக அடிபட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த இசாக் உட்பட மூவரும் இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.