திமுக எம்பி கேள்விக்கு பார்லிமென்ட்டில் நிதியமைச்சர் நச் பதில்!

வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் அவர்களது செயல்படாத சொத்துகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. டி ஆர் பாலு நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்
பதிலளித்து பேசியது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து முதன்முறையாக பணத்தை வசூலித்துள்ளது. கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திரும்ப வராத கடன்களை தள்ளுபடி செய்வதென்பது முழுமையான தள்ளுபடி என்று அர்த்தமல்ல. கடன் நிலுவைத் தொகையை வங்கிகள் வசூலித்து வருகின்றன. கடனை செலுத்தாதவர்களிடமிருந்து பொதுத் துறை வங்கிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து வருகின்றன.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது அரசியல் காரணங்களுக்காக கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த கடனை திரும்பி செலுத்தாத வர்களிடம் இருந்து எந்த பணமும் மீட்கப்படவில்லை. கசப்பான இந்த உண்மையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

செயலி அடிப்படையிலான நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்திகாதுகளுக்கு ஹேப்பி நியூஸ்… கொரோனா காலர் டியூனை நிறுத்தப் போகிறது அரசு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.