பத்மஸ்ரீ விருது பெற்றார் நடிகை சவுகார் ஜானகி

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி(90). தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2020ல் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தார். திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 28) நடந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.