சசிகலாவை அடுத்தடுத்து சந்தித்த முக்கிய நிர்வாகிகள்.!!

சசிகலாவை கேரள மாநிலம் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு, திருவள்ளூர், மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை தியாகராய நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் நகர 5வது பொருளாளர் சந்தோஷ்குமார், பிலிப்ராஜ் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், கும்முடிபூண்டி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், கிளைக் கழகச் செயலாளர் க. புரட்சி சுரேஷ், சசிகலாவை நேரில் சந்தித்தனர்.

மதுரை மாநகர் 8வது வார்டு புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர் பூமிநாதன் அவர்களின் மகனுக்கு அண்மையில் திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் நேரில் வந்து புரட்சித்தாய் சின்னம்மா அவர்களிடம் ஆசி பெற்றனர். அதே போன்று, வேலூரை சேர்ந்த ஜீவராஜ் ஜெயின் அவர்களின் மகனுக்கு அண்மையில் திருமணம் முடிந்த நிலையில், ,மணமக்கள் நேரில் வந்து, சசிகலாவிடம் ஆசி பெற்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.